Tuesday, August 6, 2019

நாளைய கலாம் விருது


டாக்டர் அப்துல்கலாம் நினைவு தினம் 

டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தன்று, இராமேஸ்வரத்தில் காஞ்சி முத்தமிழ் சங்கத்தின் முத்தமிழ் மையத்தால் 2019 மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அறிவியலில் ஆர்வமுள்ள மற்றும் பன்முக திறமைகள் கொண்ட மாணாக்கர்களுக்கு விருதுகள், பதக்கங்கள்  மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கபட்டது. அந்த வகையில் எழுத்தாளர்கருமலை நாகராஜ் அவர்களுக்கு  "நாளைய கலாம் விருது" வழங்கப்பட்டது. இவ்விழாவில் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், காஞ்சி முத்தமிழ் மையம் நிறுவனர் மற்றும் சான்றோர் பலர் கலந்துக்கொண்டனர்.

சிறந்த பேச்சாளருக்கான "நாளைய கலாம் விருது 2019"



 

படத்தில் அறக்கட்டளை நிறுவனர் திரு. நடராஜன், முன்னாள் ராணுவ வீரர்கள், கருமலை நாகராஜ் )


பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளையின் முப்பெரும் விழாவில் சமூகம், கல்வி, கலை, இலக்கியம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த தமிழக சாதனையாளர்களுக்கு அவர்களின் பணிகளையும், திறமைகளையும் பாராட்டி விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில் எழுத்தாளர், பேச்சாளர் கருமலை நாகராஜ் அவர்களுக்கும்  சிறந்த பேச்சாளருக்கான "நாளைய கலாம் விருது 2019" திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டது. 

நாளைய கலாம் விருது

டாக்டர் அப்துல்கலாம் நினைவு தினம்  டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தன்று, இராமேஸ்வரத்தில் காஞ்சி முத்தமிழ்...